Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

கும்பமேளாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடு

மக்கள் அதிக அளவில் கூடும் கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வருட கும்பமேளாவில் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, 6 வாரங்கள் நீடிக்கிறது.

கூட்டத்தின் அளவைத் துல்லியமாக கணக்கிடவும், நெரிசல் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. இது அதிகாரிகளுக்கு அவசர நடவடிக்கை எடுக்க தேவையான நேரத்தையும் தருகிறது.

விழா மற்றும் சாலைகளில் 300 கேமராக்கள்:
விழா நடைபெறும் முக்கிய இடங்களிலும் வழித்தடங்களிலும் சுமார் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் கூட்டத்தின் இயக்கங்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவின் செயல்முறை:
கேமராக்களின் உதவியுடன், கூட்டத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் செயற்கை நுண்ணறிவு துல்லியமாக கணிக்கிறது. கூட்டத்தின் அளவு பாதுகாப்பான வரம்பை மீறினால், எச்சரிக்கை ஒலி உண்டாகும்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், விழாவை சீராகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதில் ஏற்பாட்டாளர்கள் அதிக நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். அதிகமான கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கான முன்னேற்பாடாக இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை கும்பமேளா, புதிய தளர்வற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்ட விழாவாக மாறியுள்ளது.

Scroll to Top