Tazhal Media – தழல் மீடியா

/ Apr 15, 2025
Latest News
tms

இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கூறும் செய்தி பொய்யானது – பகாங் மாநில சுகாதாரத் துறை

PICTURE:AWANI

பகாங் மாநில சுகாதாரத் துறை (JKNP) வெளியிட்ட அறிவிப்பில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி வரும் “மருத்துவர் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து கடத்தினார்” என்ற செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி பரவத் தொடங்கியதிலிருந்து, பொதுமக்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியால் மருத்துவமனைகளில் நோயாளிகளும், அவர்களது குடும்பங்களும் பாதுகாப்பு குறித்து பயப்படத் தொடங்கியதாகவும், சமூகத்தில் தவறான புரிதல்கள் உருவாகிவிட்டதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

JKNP இயக்குநர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் அஹமட் ஹுசைன் இதுபற்றி கூறியதாவது:
“மருத்துவர் என்ற பெயரில் ஒரு யாரும் குழந்தைகளை கடத்தவில்லை. மருத்துவமனைகளில் உள்ள பாதுகாப்பு முறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பரப்பப்படும் இந்த போலியான செய்தி உண்மையைத் திருப்பி விடும் ஆபத்துடன் உள்ளது.”

மேலும், இந்தச் செய்தி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அது எந்தவிதமான ஆதாரமோ, புகாரோ இல்லாத ஒரு புனைச் செய்தி என்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை பரப்பியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளது.

சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு செய்யும் வேண்டுகோள் என்னவெனில், சமூக வலைதளங்களில் வரும் எந்தவொரு செய்தியையும் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும். தவறான தகவல்களால் சமூகத்தில் பயம் மற்றும் குழப்பம் உருவாகும் அபாயம் இருப்பதால், ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

துறை சார்பில், மக்கள் சந்தேகம் உள்ள செய்திகளை நேரடியாக அதிகாரப்பூர்வ வளையங்களில் கேட்டு உறுதிப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

-முல்லை மலர் பொன் மலர் சோழன்

Scroll to Top