Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலேசியா–சீனா உறவுக்கு புதிய பரிமாணம்

கோலாலம்பூர், 23 அக். –
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மற்றும் சீனாவின் ஷாங்காய் நகரம் இடையேயான பண்பாட்டு மற்றும் வடிவமைப்பு துறையில் புதிய கூட்டாண்மை உறவுகள் உருவாகி உள்ளன.

இந்த இணைப்பு இரு நகரங்களுக்குமான படைப்பாற்றல் பொருளாதாரம், நகர வடிவமைப்பு, மற்றும் கலை பண்பாட்டு வளர்ச்சி துறைகளில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசியா–சீனா நட்பு சங்கத்தின் தலைவர் டாடுக் அப்துல் மாஜித் அஹ்மத் கான் தெரிவித்ததாவது, “இந்த கூட்டாண்மை மலேசியாவின் படைப்பாற்றல் திறன்களை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தளம் ஆகும். கோலாலம்பூர் தனது நகர வளர்ச்சி திட்டங்களை ஷாங்காய் அனுபவத்துடன் இணைத்து முன்னேற உள்ளது,” என்றார்.

மேலும், UNESCO உடன் இணைந்து நகர பண்பாட்டு மாற்றம் மற்றும் வடிவமைப்புத் துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன. இது, கோலாலம்பூரின் ‘நவீன பண்பாட்டு நகரம்’ என்ற கனவை நிஜமாக்கும் வழியில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

சீனா மற்றும் மலேசியாவுக்கிடையேயான இந்த புதிய பண்பாட்டு உறவு, எதிர்காலத்தில் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

– யாழினி வீரா

Scroll to Top