Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

சுபாங் ஜெயாவில் ஆயுத கொள்ளை – போலீஸ் தீவிர விசாரணை

கோலாலம்பூர், அக் 29 – சுபாங் ஜெயா பகுதியில் ஆயுதம் பயன்படுத்தி நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஒரு குழு நபர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

சம்பவம் நடந்தது சில நாட்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள ஒரு கடைப்பகுதியில் முகம் மறைத்த நிலையில் வந்த நால்வர், பணியாளர்களை மிரட்டி பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பறித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் காண பல்வேறு ஆதாரங்களை போலீஸ் சேகரித்து வருகிறது,” என தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் குற்றவாளிகள் கையிலே ஆயுதங்களுடன் இருப்பதும், சம்பவம் சில நிமிடங்களில் நடந்ததுமாக பதிவாகியுள்ளது.

போலீஸ் தற்போது குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் எவரும் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top