Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

புத்தகங்களை கடந்து அறிவு நிலையங்களாக மாற வேண்டும் நூலகங்கள் – பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

படம்: ஊடகம்

கோலாலம்பூர், 17 ஜூன்: தலைமையிலான நூலகங்களும், நூலக அதிகாரிகளும் தங்கள் பாரம்பரியக் கடமைகளைத் தாண்டி, இளைஞர்களிடையே புத்தகப் படிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்க புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்னோார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

19வது தெற்காசிய நூலகவியல் மாநாட்டில் (CONSAL XIX) பேசுகையில், நூலகம் என்பது வெறும் புத்தகக் களஞ்சியமாக அல்லாது, அறிவு பரிமாற்றம், கலாச்சாரம் மற்றும் புத்துணர்ச்சி வாய்ந்த விவாதங்களுக்கான மையமாக மாற வேண்டும் என்றார்.

“நூலக அதிகாரியின் பங்கு என்பது புத்தகங்களை அலமாரிகளில் அடுக்குவது மட்டுமல்ல, வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அறிவையும் ஆர்வத்தையும் பரப்புவதே உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

அவர் மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அனைத்து தரப்பினரையும் அடையும் முயற்சிகளை மேற்கொள்ள நூலகர்கள் முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

மூன்றாண்டு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், 1,200-க்கும் மேற்பட்ட அசியர் நூலகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 89 ஆய்வுக் கட்டுரைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்னோார், புத்தகங்களைத் தவிர, இப்போது கல்வி நோக்கத்தில் பாண்ட்காஸ்ட், திரைப்படங்கள், இ-புத்தகங்கள் போன்ற டிஜிட்டல் உள்ளடக்கங்களை வழங்கவும் நூலகங்கள் தயார் செய்யப்பட வேண்டும் என கூறினார்.

அவசரமான சமூக மாற்றங்களுக்கு நடுநிலையாக நூலகங்கள் செயல்படவேண்டும் என்றும், கல்வி என்பது ஒரு தேசத்தின் அடித்தள தூண் என்பதை மறக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

-யாழினி வீரா

Scroll to Top