Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

குளியலறையில் 78 வயது முதியவர் மரணம்

Picture: Bernama

பத்து 14, 21, பிப்ரவரி — பேராக் மாநில பத்து 14, கம்போங் டத்தோ ரோஸ்லி பகுதியில் உள்ள வீட்டில் 78 வயது முதியவர் இன்று காலை மூடப்பட்ட குளியலறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

பேராக் தீயணைப்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அகமட் தெரிவித்ததாவது, இன்று காலை 8.14 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டதை அடுத்து, த்ரோங் தீயணைப்புத்துறை (BBP) குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“தீயணைப்பு வீரர்கள் போல்ட் கட்டர்ஸ் மற்றும் க்ரோபார் உதவியுடன் கதவை திறந்தனர். உள்ளே சென்றபோது, மலேசியா சுகாதார அமைச்சின் மருத்துவ குழு, அந்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்தது,” என்று அவர் கூறினார்.

மரணத்தின் காரணம் மற்றும் மேல் விசாரணைக்காக முதியவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்விஷயம் தொடர்பான மீட்பு நடவடிக்கைகள் காலை 8.45 மணிக்கு நிறைவுபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-யாழினி வீரா

Scroll to Top