
Picture : Awani
கோலாலம்பூர்: பிரதமர் ‘Datuk Seri Anwar Ibrahim’ , மலேசிய தன்னார்வலர்கள் மற்றும் Global Sumud Flotilla (GSF) மனிதாபிமான பணி குழுவுக்காக தனது பிரார்த்தனையை தெரிவித்தார். இந்தக் கப்பற்படை தற்போது மஞ்சள் மண்டலத்தை கடந்துவிட்டு, காசா கடல்சூழல் நோக்கி சிவப்பு மண்டலத்துக்குள் நுழையத் தயாராகியுள்ளது.
‘Anwar’, இந்த முயற்சி”Rakyat Palestin’ மக்களுக்கு அவசர உதவி கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான பணி எனக் குறிப்பிட்டார். அவர், மலேசிய தன்னார்வலர்கள் எப்போதும் அமைதி, மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடுவதாகவும் வலியுறுத்தினார்.
இந்த மனிதாபிமான மிஷன் வரும் வியாழக்கிழமை காசா கடல்சூழலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரதமர் நாட்டின் அனைத்து மக்களும் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



