Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் 39 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் – ஒருவர் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில்

Picture: FMT

புத்ராஜெயா: புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 150 பேரில், 39 பேர் இன்னும் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) தெரிவித்துள்ளது.

அந்த 39 பேரில், 17 பேர் அரசுத் துறையின் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர், மற்றும் 22 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க வகையில், 21 வயதுடைய ஒருவருக்கு தீவிர தீக்காயங்களால் பல உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

அவர் 21% அளவுக்கு தீக்காயங்கள் அடைந்திருப்பதாகவும், அவை முகம், கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மனநலம் மற்றும் சமூக உளவியல் ஆதரவு சேவைகள் (MHPSS) எனப்படும் மனதுணை செயல்பாடுகள், புத்ரா ஹைட்ஸ் மஸ்ஜித் பேரவை மண்டபம் மற்றும் கமீலியா மண்டபம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக இடம்பெயர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்ரஜெயா மருத்துவமனை மற்றும் அதன் சார்பாகவும் மனநல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 112 பேர் இந்த மனதுணை சேவைகளைப் பெற்றுள்ளனர். இதில் மனஅமைதி பயிற்சி, கலைவழி வெளிப்பாடு, மற்றும் முன்னிலை உளவியல் ஆதரவு திறன்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

சிகிச்சை மற்றும் ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் சுகாதார அமைச்சகம், தீவிரமாக விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

-யாழினி வீரா

Scroll to Top