Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ-வின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

Picture : Website

கோலாலம்பூர், அக்டோபர் 17, 2025 – இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மலேசியா முழுவதும் தீபத் திருநாள் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, தீபாவளி என்பது இருளை நீக்கும் ஒளியின் வெற்றி என்று கூறப்படும் முக்கியமான திருநாளாகும். இது நம் வாழ்வில் அன்பையும், நம்பிக்கையையும், ஒற்றுமையையும் வளர்க்கும் ஒரு விழா எனவும் அவர் கூறினார். தீபாவளி தினம் நமது குடும்பங்களும் உறவுகளும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணையும் அழகான தருணம் என்றும் குறிப்பிட்டார்.

கோபிந்த் சிங் டியோ மேலும் கூறியதாவது, மலேசியாவின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இலக்கவியல் தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருவதை நாம் பெருமையாகக் காண்கிறோம். இந்த வளர்ச்சியில் இந்திய சமூகம் பின் தங்காமல் முன்னேறி வருவதாக அவர் பாராட்டினார்.

அமைச்சர் மேலும் தெரிவித்தார், மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் நலனுக்காக பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் தமிழ் பள்ளிகள் மேம்பாடு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகள், மற்றும் வணிகர்களுக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.

அவர் முடிவில் கூறியதாவது, “அறிவின் ஒளி மற்றும் இலக்கவியல் திறன் நம் சமூகத்தை மேலும் வலுப்படுத்தும். இந்த தீபாவளி ஒற்றுமை, அறிவு, முன்னேற்றம் ஆகியவற்றை நமக்கு தரட்டும். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்,” என தெரிவித்தார்.

Scroll to Top