Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

சிலாங்கூர் மாநில முன்னேற்றத் திட்டக் கூட்டம் – வீ. பாப்பா ராய்டு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

கேமரன், 4 நவம்பர் 2025 – சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு, பூர்வீக மக்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான நிலையான ஆணைக்குழுவின் திட்டமிடல் பணிமனை மற்றும் நிலையான குழுக் கூட்டம் பஹாங் மாநிலம் கேமரனில் உள்ள செனித் ஹோட்டல் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வை மாநில ஆணைக்குழு உறுப்பினர் மாண்புமிகு வீ. பாப்பா ராய்டு தலைமையில் துவக்கி வைத்து, தனது உரையில் கடந்த ஆண்டில் அடைந்த சாதனைகளைத் தொடர்ந்து வரும் ஆண்டில் மேலும் மேம்படுத்திய செயற்பாடுகள், பரவலான தாக்கம், மற்றும் மக்கள் நலனில் நேரடியான பலன்களை அடைய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மூன்று நாள், இரண்டு இரவுகள் நடைபெற்ற இந்த பணிமனை, 2025ஆம் ஆண்டுக்கான SKU செயல்திறன் மதிப்பீடு, 2025 SKU பின்னூட்டம், 2026 ஆண்டு திட்டமிடல், மற்றும் அடுத்தாண்டு மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தது.

பத்து பிரிவுகளைக் கொண்ட இந்த அமர்வுகளில் மாவட்ட அலுவலகங்கள், UPPS, I-SEED, MySEL, பூர்வீக மக்கள் தொடர்பு பிரிவு, மற்றும் JAKOA, ICU-JPM, PERKESO, STDC போன்ற கூட்டாண்மை நிறுவனங்கள் பங்கேற்றன.

மாண்புமிகு வீ. பாப்பா ராய்டு அவர்கள், இந்த பணிமனை மாநில அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து மக்களுக்கான நன்மைகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய தளமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top