Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

கிளாங்கில் நேற்று இரவு மூன்று தெரு வீடுகள் தீ விபத்தில் முற்றிலும் அழிந்துவிட்டன

Picture: Bernama

ஷா அலாம் 31: கிளாங்கில் தாமான் ஸ்ரீ கடோங் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஒரு மாடி தெரு வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன.

மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (JBPM) சிலாங்கூர் பகுதி செயல்பாட்டு உதவி இயக்குநர் அக்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்ததாவது, இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

“இச்சம்பவம் குறித்து இரவு 11.09 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பின், கிளாங்க் தெற்கு, கிளாங்க் வடக்கு மற்றும் அண்டாலஸ் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 16 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் மூன்று தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்தோம் என்று அவர் கூறினார்.

ஆரம்ப தகவலின்படி, தீ விபத்து ஒரு வீடு மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மேற்கொண்ட மேலான விசாரணையில், மூன்று வீடுகளும் தீயில் முற்றிலும் அழிந்திருப்பது உறுதியாகியுள்ளது,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்து இரவு 11.45 மணியளவில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஏற்பட்ட பொருளழிப்பு மதிப்பு மற்றும் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்து தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-முல்லை மலர் பொன் மலர் சோழன்

Scroll to Top