
கோலாலம்பூர், 04 நவம்பர் – ஹோட்டலின் அறையில் தைவானிய இன்ஃப்ளூயென்சர் Iris Hsieh (31) மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், மலேசிய போலீஸ் விசாரணையின் முடிவில் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் திடீர் மரணம் எனக் கருதப்பட்ட இந்த சம்பவம், மேலதிக சாட்சிகள் மற்றும் விசாரணை முடிவின் பின்னர் மாற்றப்பட்டுள்ளது.
தேசியப் போலிஸ்படைத் தலைவர் டத்தோக் பாடில் மர்சுஸ் கூறியதாவது, “இரு அக்டோபர் 2025 அன்று உடல் காணப்பட்டது. ஆரம்ப விசாரணையில் இது திடீர் மரணம் எனக் கருதப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சாட்சிகள் கொலையாக வகைப்படுத்த காரணமானது” என்று தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மலேசிய கலைஞர் நமேவீ பெயரும் ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட நிலையில், அவர் தனது சமூக வலைத்தளங்களில் “நான் எந்த போதைப் பொருளும் பயன்படுத்தவில்லை. உண்மை விரைவில் வெளிப்படும்” என்று கூறியுள்ளார்.
தற்போது போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி, சம்பவத்தின் பின்னணியை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சித்து வருகிறது. சம்பவத்தில் தொடர்புடைய எந்த தகவலும் உள்ளவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு போலீஸ் கேட்டுக்கொண்டனர்.
இந்த கொடுமையான சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மற்றும் விருந்தினர் பாதுகாப்பு, ஹோட்டல் கண்காணிப்பு போன்ற முக்கிய அம்சங்களை மீண்டும் கவனிக்கவைக்கிறது.
‑யாழினி வீரா



