Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

மாணவர்கள் தவறு செய்தாலும் எதிர்காலம் முக்கியம் – பிரதமர் அன்வார்

படம்:ஊடகம்

சபா, ஜூன் 24 – பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களை வெளியேற்ற கூடாது எனத் தெரிவித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் சாம்ப்ரி அப்த் காதிர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனது முகநூல் பதிவில் கருத்து வெளியிட்ட சாம்ப்ரி, யுஎம்எஸ் மாணவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும், அவர்கள் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சி முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு பிரதமர் அவர்கள் தண்டனைவிடாமல் மனிதநேயமான அணுகுமுறையைக் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

“மாணவர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என பிரதமர் தெளிவாக தெரிவித்தார்,” என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம், ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக “ஊழலுக்கெதிரான காவலர்” என்ற வாசகத்துடன் அன்வாரின் சுவரொட்டியை சில மாணவர்கள் எரித்ததால்தான் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்குப் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து PKR இளைஞர் தலைவரும், முன்னாள் SPRM ஆணையர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், அரசின் வாக்குறுதிகளை மீறியதாக குற்றம்சாட்டிய மாணவர்களுக்கு எதிராக துரோகம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என சபா காவல்துறைத் தலைவர் ஜௌதே டிகுன் தெரிவித்துள்ளார்.

இவ்வகை நிகழ்வுகள் அரசியலும், கல்வி துறையும் சந்திக்க வேண்டிய சவால்களைக் காட்டும் வகையிலும், மாணவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து புதிய கேள்விகளையும் எழுப்புகின்றன.

-யாழினி வீரா

Scroll to Top