Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

ஆறு புதிய நாடுகள் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் செய்தன

கோலாலம்பூர், 23 செப். – பிரான்ஸ், லக்சம்பர்க், மால்டா, சான் மரினோ, ஆண்டோர்ரா மற்றும் மற்றொரு நாடு பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் செய்துள்ளன. இதன் மூலம், உலகிலுள்ள 193 நாடுகளில் 151 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

இந்த அங்கீகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது வெளிவந்தது. ஐரோப்பிய நாடுகள் இந்த அங்கீகாரத்தை வரவேற்றும், இது சமாதான முயற்சிகளுக்கு முக்கியமான படியாகும் என்றும் தெரிவித்தன.

ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இதை கண்டித்து, இது சமாதான முயற்சிகளை பாதிக்கும் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் என தெரிவித்தனர். இரு நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன.

இந்த அங்கீகாரங்கள் பாலஸ்தீனத்திற்கு முழுமையான ஐக்கிய நாடுகள் உறுப்பினர் நிலையைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

-யாழினி வீரா

Scroll to Top