Tazhal Media – தழல் மீடியா

/ May 08, 2025
Latest News
tms

கேசாஸ் நெடுஞ்சாலையில் மனைவி மரணம் – கணவர் கைது!

Picture: Google

கோலாலம்பூர், மே 7: கேசாஸ் நெடுஞ்சாலையில் பெட்டாலிங் ஜெயாவை நோக்கி செல்லும் பாதையில், ஆவான் பெசார் ஓய்வுத்தளத்துக்கு அருகே ஒரு பெண்ணின் மரணம் தொடர்பாக, அவரது 50 வயதான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செராஸ் மாவட்ட காவல் துறை தலைவர், உதவி கமிஷனர் ஐடில் பொல்ஹசன் தெரிவித்ததாவது, இந்த சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை, பூச்சோங்கில் உள்ள தாமான் கின்ராரா பகுதியில் கைது செய்யப்பட்டதாகும். இந்த கைது, பண்டார் கின்ராரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடைபெற்றது.

மரண விசாரணை, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304A கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்க விசாரணையில், சந்தேகநபர் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை கடந்து வந்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சந்தேகநபரின் சிறுநீர்பரிசோதனையில் மெதாம்படமின், அம்பெட்டமின் மற்றும் பென்ஸடயஸிபின் என மூன்று போதைப்பொருட்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முன்பு ஒரு குற்றச்சாட்டும், இரண்டு போதை வழக்குகளும் உள்ளதாக போலீசார் கூறினர்.

மரணமடைந்த மனைவியிடம் இருந்தும் மெதாம்படமின் பயன்பாடு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் போலீசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-யாழினி வீரா

Scroll to Top