Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலேசியா மந்தநிலை அடையாது – பிரதமர் அன்வார் உறுதி

Picture: Bernama

கோலாலம்பூர், 6 ஏப்ரல்: மலேசியா தற்போது மந்தநிலையில் (recession) சிக்காது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிபட தெரிவித்துள்ளார். அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகள் எதிரொலிக்கும்போதும், மலேசியா பொருளாதார ரீதியாக நிலைத்துவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவிப்பதாவது, பிரதமர் அன்வார், “மலேசியா தற்கொலை சலுகைகள் (retaliatory tariffs) எதுவும் அறிமுகப்படுத்தப்போவதில்லை. இருப்பினும், 24% வரி அமலுக்கு வந்தால், 2025-ம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதமான 4.5 – 5.5% மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டியிருக்கும்,” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா ஏப்ரல் 5 முதல் மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்சம் 10% வரியும், ஏப்ரல் 9 முதல் பெரும்பாலான பொருட்களுக்கு 24% வரியும் விதிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு விலக்கு உண்டு.

பொருளாதாரத் தளங்கள் வலுவாக உள்ளதாகவும், மக்களின் செலவீன திறன், உள்நாட்டு முதலீடு, சுற்றுலா வருவாய் மற்றும் நாட்டில் முக்கியத் தேசிய திட்டங்கள் ஆகியவை மலேசியா வளர்ச்சிக்கு துணை நிற்கின்றனவெனவும் பிரதமர் தெரிவித்தார்.

-யாழினி வீரா

Scroll to Top