
மாஞ்செஸ்டர், ஜூன் 11 – மாஞ்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பெப் குவார்டியோலா, மாஞ்செஸ்டர் பல்கலைக்கழகத்திடம் இருந்து கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றபோது, காசா பகுதியில் நடந்து வரும் போர் குறித்து உணர்ச்சி வலிமையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
“காசாவில் நடந்துகொண்டிருக்கும் நிலை மிகவும் வலிக்கிறது. இது என் உடலையே சிதைக்கும் அளவில் இருக்கிறது. இது யாரது அரசியல் கொள்கை என்று இல்லை… இது வாழ்வையும் அயலானை நேசிப்பதையும் பற்றியது,” என்று கூறினார் 54 வயதான குவார்டியோலா.
2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலின் படை நடவடிக்கையில் 54,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிகள் உயிரிழந்துள்ளனர். இதைத் தனது உரையில் சுட்டிக்காட்டிய குவார்டியோலா, “நாம் பார்க்கும் குழந்தைகள் நம்முடையவர்கள் அல்லவென எண்ணுவது ஆபத்தானது. நாளைய குழந்தைகள் நம்முடையவர்களாக இருக்கலாம்,” என்றார்.
ஆறு ப்ரீமியர் லீக் வெற்றிகளை மாஞ்செஸ்டர் சிட்டிக்கு தந்து, Guardiola Sala Foundation வழியாக பல தொண்டு முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் அவர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பட்டத்தை பல்கலைக்கழகத்தின் தானியங்கி வேந்தர் நசீர் அப்சால் வழங்கினார்.
-ஸ்ரீ



