Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் Turkiye பயணத்தின் இரண்டாம் நாள் நிரம்பிய நிகழ்ச்சி

Picture : Awani

மலேசியா பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் Turkiye நாட்டிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் இரண்டாம் நாள் மிகவும் பிஸியானதாக இருந்தது. இந்த பயணம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்படவேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

இரண்டாம் நாளில் பிரதமர் அன்வார், Turkiye அரசின் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பல விசயங்களில் கலந்துரையாடினார். வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான ஒத்துழைப்புகள் பற்றி முக்கியமாக பேச்சுவார்த்தைகள் நடந்தன.

மேலும் கலாச்சாரம், மனிதாபிமான உதவிகள் மற்றும் சமூக திட்டங்களை முன்னேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு நாடுகளின் மக்களுக்கு நேரடியாக நன்மை ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் அன்வார் இந்த பயணத்தில் எடுத்த நடவடிக்கைகள், மலேசியாவுக்கும் Turkiye-க்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்தும் முக்கிய முயற்சியாக மதிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த உறவு வலுவாக வளர்ந்து, இரு நாடுகளுக்கும் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top