Tazhal Media – தழல் மீடியா

/ Apr 08, 2025
Latest News

5.5 மில்லியன் நாணய மாற்றத்தில் மோசடி – நிறுவன இயக்குநர் மீது விசாரணை

Picture: Awani

சிலாங்கூர், ஏப்ரல் 4: தேசிய போலீஸ்படை (PDRM), வெளிநாட்டு நாணய மாற்றத்தில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் மீது விசாரணை தொடங்கியுள்ளது.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த மோசடியால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் RM5.5 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மலேசிய குற்றச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

விசாரணை தொடரில், சரவாக் மாநிலத்தின் மீரி பகுதியைச் சேர்ந்த அந்த நிறுவன இயக்குநரை அறிந்திருந்ததாக தெரியவந்துள்ளது. தனது நிறுவனத்தின் ஊதியப் பணிகள் மற்றும் வியட்நாமில் உள்ள தொழில்துறைகளுக்காக பல முறை நாணய மாற்றம் செய்துள்ளார்.

2025 மார்ச் இறுதியில், RM6.5 மில்லியன் அளவுக்கு நாணய மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், வியட்நாம் நாணயத்தில் கிடைத்தது வெறும் RM900,000 மட்டுமே.

மொத்தமாக 15 வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. பின்னர், சந்தேகநபர் பணத்தை வழங்க மறுத்து, பல்வேறு காரணங்களைச் சொல்லி ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

பொது மக்களுக்கு மோசடி தொடர்பான எச்சரிக்கையை வழங்கிய ஹுசைன், தேசிய வங்கியுடன் (BNM) பதிவுசெய்யப்பட்ட நாணய மாற்ற நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

-யாழினி வீரா