Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது தவிர்க்க முடியாதது – ஜப்பான் பிரதமர்

டோக்கியோ, 24 செப். – பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி அரசை அங்கீகரிப்பது “எப்போது” என்ற கேள்வியல்ல, “தவிர்க்க முடியாதது” என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

அவர் வலியுறுத்துகையில், மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகால அமைதி நிலைநிறுத்த பாலஸ்தீனர்களின் உரிமைகளை மதிப்பதே ஒரே வழி என குறிப்பிட்டார். “பஸ்தீனர்களின் சுயாட்சி, உலகளவில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நியாயமான அடிப்படை உரிமை. இதை ஒத்திவைக்க முடியாது. அது நிகழ்வது எப்போது என்பது மட்டுமே கேள்வியாகும்,” என்று கிஷிடா தெரிவித்தார்.

சமீபத்திய சர்வதேச அழுத்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் மாற்றங்கள், பாலஸ்தீன் பிரச்சனைக்கு உலகின் கவனத்தை மீண்டும் திருப்பியுள்ளன. இந்த நிலையில், ஜப்பான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும், ஜப்பான் அரசு, பாலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பிராந்தியத்தில் நிலையான அரசியல் தீர்வுக்கு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் என்றும் கிஷிடா வலியுறுத்தினார்.

இந்த அறிவிப்பு, உலக அரங்கில் பாலஸ்தீன் அரசை அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு புதிய வலுசேர்க்கையாகக் கருதப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top