Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

புக்கிட் லாருட் மலைப்பகுதியில் சிக்கிய ஏழு பயணிகள் – தீயணைப்பு துறையினர் வெற்றிகரமாக மீட்டனர்

கோலாலம்பூர், 03 நவ. – பேராக் மாநிலத்தின் தைப்பிங் அருகே உள்ள புக்கிட் லாருட் மலைப்பகுதியில் சிக்கிய ஏழு பேர் கொண்ட குழுவை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் (JBPM) வெற்றிகரமாக மீட்டனர்.

இந்த ஏழு பேரில் ஆறு பெண்கள் மற்றும் ஒருவரே ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மலை உச்சியில் இருந்து இறங்கும்போது மோசமான வானிலை மற்றும் சரிவான பாதை காரணமாக சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்தவுடன் டாய்பிங் தீயணைப்பு நிலையம் நேற்று மாலை 6.53 மணியளவில் சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவை அனுப்பியது.

மீட்பு நடவடிக்கையின் போது இரண்டு பெண்களுக்கு கடுமையான தசை வலி மற்றும் சோர்வு ஏற்பட்டது. ஒருவருக்கு காலில் இடுப்பு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மீதமுள்ள நால்வர் சிறிய அளவிலான உடல் சோர்வை மட்டுமே அனுபவித்தனர்.

தீயணைப்பு குழுவினர் நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர் ‘LAST’ (Look – Assess – Stabilise – Transport) எனும் மீட்பு நடைமுறையின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக மலையின் அடிவாரத்துக்குக் கொண்டு வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இந்நிகழ்வு இரவு 9.50 மணிக்குள் வெற்றிகரமாக நிறைவுற்றதாக பெராக் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள், மலையோரப் பகுதிகளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் போது வானிலை நிலையை சரிபார்த்து, தேவையான உபகரணங்களுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Scroll to Top