Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

ஆபாச வீடியோவை அனுப்பி உல்லாசத்திற்கு அழைத்த 2 பேராசிரியைகள்.. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

அமராவதி, 3 நவ. – ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த ஒரு சோகமான சம்பவம் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அங்கு இறுதி ஆண்டு படிக்கும் 22 வயது மாணவர் சாய் தேஜா, கல்லூரியில் சிறந்த மாணவராக பெயர் பெற்றிருந்தார். ஆனால் அதே கல்லூரியில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள், அவருக்கு வாட்ஸ்அப் வழியாக ஆபாச வீடியோவும், அசிங்கமான அழைப்புகளையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் கூறிய வேண்டுகோளை அவர் மறுத்தபோது, தேர்வில் தோல்வியடைய வைப்போம் என மிரட்டியதும் வெளிச்சம் பார்த்துள்ளது.

இதைத் தொடர்ந்து மனமுடைந்த சாய் தேஜா, தன் மொபைல் மூலம் துயரமான ஆடியோ பதிவு ஒன்றை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். தற்போது அந்த இரண்டு பேராசிரியர்களும் விசாரணைக்காக போலீசின் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தச் சம்பவம் கல்வி துறையில் நிலவும் ஒழுங்கின்மையும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

பெற்றோர்கள் சமூக வலைத்தளங்களில் “கல்வி நிலையங்கள் அறிவை வளர்க்கும் தளமாக இருக்க வேண்டும்; மாணவர்களின் உயிரை பறிக்கும் இடமாக அல்ல” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top