
பெட்டாலிங் ஜெயா, நவ. 2 – மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடி லோ ஜி ஹெங் மற்றும் நோராகிலா மைசாரா ரமன் வியட்நாம் இன்டர்நேஷனல் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
இறுதிப்போட்டியில் அவர்கள் தாய்லாந்தின் சுராசித் அரியாபரனீகுல் மற்றும் அத்திதாயா போவனோன் ஆகியோரைக் 21-13, 14-21, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றனர். கடுமையான போட்டியில் முதல் செட்டில் மேலோங்கிய மலேசிய ஜோடி, இரண்டாவது செட்டில் சிறிது பின்னடைந்தபோதிலும், இறுதி செட்டில் தங்கள் திறமையையும் ஒருங்கிணைப்பையும் காட்டி வெற்றியை உறுதிசெய்தனர்.
இந்த வெற்றியுடன் லோ ஜி ஹெங் – நோராகிலா ஜோடி இந்த வருடம் இரண்டாவது சர்வதேச பட்டத்தைப் பெற்றுள்ளனர். இதற்கு முன் அவர்கள் மலேசியா ஜூனியர் இன்டர்நேஷனல் சவால் போட்டியிலும் வெற்றி பெற்றனர். தேசிய பயிற்சியாளர் ஹச்வான் ஜமாலுதீன் அவர்களை பாராட்டி, “இருவரும் மிகுந்த ஒழுக்கமும் ஒருங்கிணைப்பும் காட்டியுள்ளனர். இது அவர்களின் புதிய பயணத்துக்கு ஒரு முக்கிய அடித்தளம்” என்றார்.
அவர்களின் புதிய பயிற்சி பங்காளிகளுடன் வரவிருக்கும் போட்டிகளில் மேலும் அதிரடியான சாதனைகள் காணப்படும் என்று அவரை அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வெற்றி மலேசிய பேட்மிண்டன் துறையில் இளம் வீரர்களின் உற்சாகத்தையும் திறமையையும் மீண்டும் உறுதிசெய்கிறது.
மலேசியா பேட்மிண்டன் சங்கம் இந்த வெற்றியை பெருமையாக கொண்டாடி, இளம் வீரர்கள் சர்வதேச மேடையில் மேலும் உயரங்களைக் காண விரும்புவதாகவும் வெளியிட்டுள்ளது.
– யாழினி வீரா



