Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பிரதமர் அன்வார் ‘Tiong’, மற்றும் ‘MOTAC’ அமைச்சகத்துக்கு மது விவகாரம் தொடர்பாக கடுமையான எச்சரிக்கை வழங்கினார்

Picture: Awani

கோலாலம்பூர் : Perdana Menteri, Datuk Seri Anwar Ibrahim , சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார ‘Datuk Seri Tiong King Sing-கிடம் மது (ஆரக்) தொடர்பான பிரச்சினையில் கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.

அவர் கூறியதாவது, அரசாங்கம் எந்த வகையிலும் மதுபானம் குறித்த விஷயத்தில் தளர்ச்சி காட்டாது, குறிப்பாக இது நாட்டின் சட்டம், மதம் மற்றும் பண்பாட்டு மதிப்புகளுக்கு முரணாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அன்வார் மேலும் கூறியதாவது, அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொற்பொழிவுகளிலும், செயல்களிலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகள் நாட்டின் நல்லபெயருக்கு கேடு விளைவிக்கும் என்பதால், ஒவ்வொருவரும் அதற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, பிரதமர் அமைச்சரவையில் ஒழுக்கம் மற்றும் மரியாதையை காப்பாற்றுவது மிக முக்கியம் என்றும், எந்த அமைச்சர் தங்கள் எல்லையை மீறினாலும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அன்வார் கூறியதாவது, “அரசாங்கம் மக்களின் நலனுக்காகவும், நாட்டின் ஒற்றுமையை காக்கவும் உறுதியாக செயல்படுகிறது. எனவே, அமைச்சர்கள் அனைவரும் அதே நோக்கத்துடன் செயல்பட வேண்டும்,” என்றார்.

இந்த சம்பவம் சமீபத்தில் ‘Datuk Seri Tiong King Sing‘ அளித்த கருத்துக்கள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பிரதமர் அளித்த எச்சரிக்கையாகும்

Scroll to Top