
படம் : கூகுள்
நெதெர்லாந்து, 3பிப்ரவரி- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
நெதர்லாந்தின் விக் ஆன் ஜீ நகரில் இந்த செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 12-வது சுற்றுப் போட்டியில் உலக சாம்பியனான டி. குகேஷ், ஹாலந்து வீரர் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் டிரா செய்தார். அதே நேரத்தில் பிரக்ஞானந்தா, செர்பிய வீரர் அலெக்ஸி சரானாவை தோற்கடித்தார். 12-வது சுற்றின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா இருவரும் தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோரோவை வீழ்த்தினார்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலி, துருக்கியின் எடிஸ் குரேலிடம் தோல்வி கண்டார்.
ஶ்ரீஷா கங்காதரன்