Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

பள்ளி வேன் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு – டிரைவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் மறுப்பு

Picture: Awani

புக்கிட் இண்டா, மே 7: இஸ்கந்தர் புத்ரி, புக்கிட் இண்டாவில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பள்ளி வேனில் தனியாக விட்டு விடப்பட்டதால், ஒரு ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், சம்பந்தப்பட்ட வேன் டிரைவர் யாவ் சீ வெங் (56) இன்று பத்து பாத் அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார்.

இந்த குற்றச்சாட்டை, நீதிபதி முகமது காலித் அபு கரீம் முன், மண்டரின் மொழியில் வாசித்த நீதிமன்ற மொழிபெயர்ப்பாளருக்குப் பின்னர் அவர் ஒப்புதல் மறுப்பு தெரிவித்தார்.

படிபோல, ஐந்து வயது இரு மாதங்கள் உடைய சிறுவனை காலை 8 மணி முதல் 12.05 மணி வரை வேனில் விட்டதால், சிறுவன் வெயிலில் வாடி உயிரிழந்தான். இது குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் குற்றமாகக் காணப்படுகிறது. குற்றம் உறுதியாகும் பட்சத்தில், 20 ஆண்டுகள் சிறை அல்லது அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும்.

மாற்றாக, குற்றவாளி சமூக சேவையை குறைந்தது 36 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 240 மணி நேரம் வரை ஆறு மாதத்தில் பூர்த்தி செய்யவும் கட்டாயப்படுத்தலாம்.

மத்திய அரசு வழக்குரைஞராக ஷரீஃபா நடாஷா செயத் அகமது செயல்பட்டார்; பதிலாக, தவ்ஜென் கோ என்பவர் குற்றவாளிக்கு வாதம் நல்கினார். நீதிமன்றம், குற்றவாளிக்கு RM7,000 பிணை மற்றும் சாட்சிகளைத் தொடர்புக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் பாஸ்போர்ட் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இக்கேஸ் ஜூன் 12 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

-யாழினி வீரா

Scroll to Top