Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

தாமான் பிஸ்தாரியில் லாரி டிரைவரை தாக்கிய 6 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் தடுப்புகாவல்

Picture: NST

நிபோங் தெபால், 7 ஏப்ரல்: நிபோங் தெபாலில் உள்ள தாமான் பிஸ்தாரியில் நேற்று அதிகாலை ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவரை பாராங் கத்தி மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய 6 பேருக்கு 5 நாள் போலீசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை எளிதாக்க மாஜிஸ்திரேட் நுருல் ஐன்னா அஹ்மத் தலைமையிலான ஜாவி நீதிமன்றம், 25 முதல் 29 வயதுக்கிடையிலான சந்தேகப்படுகளுக்கு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை 3.30 மணியளவில் நடந்தது. 26 வயதுடைய அந்த லாரி டிரைவர் வீட்டு ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட குழு பாராங் கத்தி மற்றும் தலைக்கவசத்தால் அவரை தாக்கினர். இதனால் அவரது தோள்பக்கம், கை மற்றும் முதுகு பகுதிகளில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பின் போலீசார் நிபோங் தெபால் பகுதியை சுற்றி நடந்த அதிரடியில், அனைத்து சந்தேகப்படுகளையும் வேறு வேறு இடங்களில் கைது செய்தனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னுள்ள காரணம், தவறான புரிதலே என போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

-யாழினி வீரா

Scroll to Top