Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

மலேசியா – தாய்லாந்து உறவு வலுப்படுத்த அழைப்பு

கோலாலம்பூர், 19 செப் – மலேசியா பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், புதிய தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுலை அதிகாரப்பூர்வ பணிகளைத் தொடங்கிய பின் மலேசியா வருமாறு அழைத்துள்ளார்.

அன்வார், தனது பேஸ்புக் பதிவில், இன்று தொலைபேசி உரையாடலின் போது இந்த அழைப்பை வழங்கியதாக தெரிவித்தார்.

“இவ்விழா விஜயம் மலேசியா–தாய்லாந்து உறவை மேலும் வலுப்படுத்தும். எங்களின் உரையாடலில் தாய்லாந்து–கம்போடியா எல்லையில் சமீபத்திய நிலவரம் பற்றியும் பேசினோம். எல்லோருமே அமைதியை பேணுவது அவசியம்; தேவையற்ற பதற்றத்தை உருவாக்கக்கூடிய வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தினேன்,” என அன்வார் கூறினார்.

அவர் மேலும், எல்லை தொடர்பான பிரச்சினைகள் Jawatankuasa Sempadan Bersama (JBC) மூலம் பேச்சுவார்த்தை வழியாக தீர்க்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

“மலேசியா எப்போதும் உரையாடல், தூதரகம் மற்றும் பரஸ்பர புரிதல் என்பவையே பிராந்திய அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் சிறந்த வழி என்று நம்புகிறது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்தின் 32வது பிரதமராக ஆன அனுடின் (58), Bhumjaithai கட்சியின் தலைவர் ஆவார். அவர் கடந்த செப்டம்பர் 7 அன்று ராஜஅனுமதி பெற்று பொறுப்பேற்றது, தாய்லாந்தின் அரசியல் தலைமைக்குள் புதிய அதிகாரப் பக்கமாக பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top