Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

கேன்சர் எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகு, தேர்ச்சியுடன் SPM முடித்த மாணவி

PICTURE:AWANI

கோலாலம்பூர், ஏப்ரல் 27 — ஒரு வருடம் வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் இருந்தாலும், மலேசிய மாணவி ஒருவர் தனது வாழ்வின் மிகப்பெரிய சோதனையை வென்று, சிறப்பாக மலேசிய உயர்தரப் பரீட்சை (SPM) தேர்வில் வெற்றி பெற்றார்.

17 வயதான நூர் அலியா சாகிரா, கடந்த ஆண்டு, அரிய வகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். நோய் மற்றும் சிகிச்சைகளால் அவர் பெரும்பாலும் பள்ளி செல்ல முடியாமல் இருந்தார். ஆனால் நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவள் உறுதி சிதையவில்லை.

“நான் இழந்த நேரத்தை மன உறுதியாலும் கடுமையான உழைப்பாலும் ஈடுகட்ட முடிவு செய்தேன்,” என்று நூர் அலியா தனது வெற்றியைப் பற்றி பகிர்ந்துகொண்டார். மருத்துவமனையிலும் வீட்டிலும் இருந்து ஆன்லைன் வகுப்புகள், தனிப்பட்ட கற்றல் திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு மூலமாக, அவர் தன் கல்விப் பயணத்தை தொடர்ந்தார்.

SPM முடிவுகள் வெளியானபோது, நூர் அலியா 9A என்ற மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றார், இது அவரின் குடும்பத்தையும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களையும் பெருமிதமடையச் செய்தது.

அவளது தாய், புவான் ரோஸ்மினா, “அவள் பலமுறை தளர்ந்திருந்தாலும், கடைசிவரை விடாமல் போராடினாள். அவள் வெற்றிக்கு நாங்கள் மிகுந்த நன்றியுள்ளோம்,” என்று கூறினார்.

தற்போது, நூர் அலியா தனது மருத்துவக் கனவை தொடர விரும்புகிறார். “நான் எதிர்காலத்தில் ஒருநாள் டாக்டராகி, என் போன்ற நோயாளிகளுக்கு உதவ விரும்புகிறேன்,” என்றார்.

அவளது கதை, பல மாணவர்களுக்கு, குறிப்பாக சோதனைகளை சந்திக்கும்வர்களுக்கு, பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

-முல்லை மலர் பொன் மலர் சோழன்

Scroll to Top