Tazhal Media – தழல் மீடியா

/ Mar 21, 2025
Latest News
tms

சிங்கப்பூர் ஒலி 96.8 அறிவிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்c

Picture: CNA

சிங்கப்பூர், 21 மார்ச் — ஒலி 96.8 வானொலியில் பணியாற்றியுள்ள முன்னாள் படைப்பாளரும், உள்ளூர் ஊடக பிரபலமுமான குணாளன் மோர்கன் (43) மீது ஏழு குற்றச்சாட்டுகள், அதில் நான்கு பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக Channel News Asia (CNA) தெரிவித்துள்ளது.

குணாளன் இரண்டு பெண்களின் பிறப்புறுப்புகளை அவர்களின் அனுமதி இல்லாமல் படமெடுத்ததாகவும், 16 வயதுக்கு குறைவான ஒருவருடன் பாலியல் உரையாடல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மூவரின் அடையாளங்கள் மற்றும் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

குணாளன் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2024 செப்டம்பர் 16 அன்று அவர் Instagram உரையாடல்களை நீக்கியதாகவும், இது நீதித்துறை நடவடிக்கைகளை தடுக்கும் செயலாக கருதப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Mediacorp, குணாளன் கைது செய்யப்பட்டதும் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியதாக தெரிவித்துள்ளது. பின்னர், அவரை நிரந்தரமாக நீக்குவதற்கான அறிவிப்பு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில், குணாளன் தனியாக ஆஜராகி, சட்ட ஆலோசனை பெற திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். அடுத்த விசாரணை ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறும்.

சிங்கப்பூரின் சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்டவருடன் பாலியல் உரையாடலில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம்.
வொயரிசம் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டு சிறை, அபராதம், அல்லது கம்பளி அடிகள் கிடைக்கலாம்.

Scroll to Top