
கோலாலம்பூர், 25 செப். – செலாங்கூர் குடியுரிமை துறை (JIM) தலைமையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில், போர்ட் கிளாங் புலாவு இந்தா தொழிற்பேட்டையில் வசித்துவரும் 662 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 1,132 பேரில், ஆவணமின்மை, காலாவதியான அனுமதி மற்றும் விசா விதிமுறை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பலர் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள்.
அவர்களில் பெரும்பான்மையானோர் பங்களாதேஷ் (545) நாட்டவர்கள்; தொடர்ந்து மியான்மார் (36), பாகிஸ்தான் (35), நேபாளம் (24), இந்தியா (10) மற்றும் இந்தோனேஷியா (9) நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JIM செலாங்கூர் இயக்குநர் கைருல் அமினுஸ் காமாருதின் கூறுகையில், அனைவரும் விசாரணைக்காக முதலில் செலாங்கூர் JIM தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் செமனிஹ் குடியுரிமை முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்.
சோதனையின் போது, வெளிநாட்டவர்களை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வீட்டு விலைவாசல் தொழில் இடமும் பறிமுதல் செய்யப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்டவர்கள் முன்னதாகவே தகவல் அறிந்து தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
இவ்வாறு நடத்தப்பட்ட நடவடிக்கையில் JIM குவாலாலம்பூர், பேராக், நெகிரி செம்பிலான் பிரிவுகள், போலீஸ், பொது பாதுகாப்பு படை, குடிமக்கள் பாதுகாப்பு படை, கிளாங் மாநகராட்சி (MBDK) மற்றும் தேசிய பதிவு துறையும் பங்கேற்றன.
மேலும், MBDK சோதனையில் எட்டு வணிக வளாகங்கள் விதிமுறை மீறியதற்காக மூடப்பட்டன. இதில் உணவகம், கடைகள் மற்றும் பொதுமக்கள் பாதையை மறித்திருந்த சில இடங்களும் அடங்கும்.
இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என குடியுரிமை துறை தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா



