
புத்ராஜாயா, ஜூன் 11 – அமெரிக்காவின் புதிய வரி மற்றும் குடிபுத்திய கொள்கைகள் மலேசிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உள்ளூர் உதவித்தொகை வழங்குநர்கள், மாணவர்களை அமெரிக்காவிற்கு மாற்றாக பிற முன்னணி நாடுகளுக்கு அனுப்பும் வகையில் திட்டமிட வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸாம்ப்ரி அப்துல் காதர் வலியுறுத்தினார்.
“உலகத் தரத்தில் உயர்ந்த பல பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவைத் தவிர பல நாடுகளிலும் உள்ளன. நாம் பின்னடைவு கொள்கைகளால் மாணவர்களின் வாய்ப்புகளை இழக்கக் கூடாது,” என அவர் ASEAN–மலேசிய தலைமைத்துவம் 2025 திட்டத்தின் நிகழ்ச்சியில் பதிப்பாசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களுக்கான வீசாக்களை முடுக்கும் நடவடிக்கைகள், சமூக ஊடக பதிவுகளை கொண்டு புது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் திட்டங்களை முன்னெடுத்தது.
இந்த சூழ்நிலையில், MARA தலைவர் அஸ்ராப் வாஜிடி துஸுகி, “2024 முதல் MARA மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதில் நிறுத்தம் செய்யப்படும்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலேசிய அரசு, கல்வி உதவிக்கொடுக்கப்படும் மாணவர்களுக்கு பிற முன்னணி நாடுகளில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டு வருகிறது.
-யாழினி வீரா



