Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

சுல்தான் இப்ராஹிம் மற்றும் ‘Arab Saudi’ இளவரசர் Mohammed bin Salman சந்திப்பு

Picture : Awani

மலேசியாவின் யாங் டி-பெர்துவான் ஆகோங் சுல்தான் இப்ராஹிம், இன்று (திங்கட்கிழமை) ‘Saudi’ அரேபியாவின் இராஜதானியான ரியாத்தில், அந்த நாட்டின் இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானை சந்தித்தார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பில், மலேசியா மற்றும்’Saudi’ அரேபியா இடையிலான பொருளாதாரம், முதலீடு, எரிசக்தி, கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக, ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான ஏற்பாடுகளை மேம்படுத்தி, மலேசியா யாத்திரீகர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுல்தான் இப்ராஹிம், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவை பேணிவந்துள்ளதை நினைவூட்டினார். மேலும், இந்த நட்புறவு எதிர்காலத்தில் மேலும் வளர்ந்து, பரஸ்பர நன்மைக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இளவரசர் முகமது பின் சல்மான், மலேசியா என்பது ‘Saudi’ அரேபியாவுக்கு ஒரு முக்கியமான பங்காளி நாடு என்று பாராட்டினார். அவர், வணிகம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து பணிபுரிவது எதிர்காலத்தில் பெரிய பலனை அளிக்கும் என தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு, மலேசியா மற்றும் ‘Saudi’ அரேபியாவின் உறவை அரசியல் மட்டுமின்றி, மக்கள் மட்டத்திலும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இது இரு நாடுகளுக்குமிடையிலான நட்பின் அடையாளமாகவும், சர்வதேச ஒற்றுமைக்கான முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

Scroll to Top