
கோலாலம்பூர், 24 அக். –
மலேசியாவின் பங்கு சந்தையான பர்சா மலேசியா இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் சிறிது வீழ்ச்சியுடன் தொடங்கினாலும், பின்னர் மீண்டும் நிலைபெற்று உயரும் போக்கைக் கண்டது.
காலை அமர்வில், முக்கிய குறியீட்டு மதிப்பு 1,602 புள்ளியில் துவங்கி பின்னர் 1,603 புள்ளியை எட்டியது. இந்த மீட்சிக்கு முக்கிய காரணமாக பிளாண்டேஷன் மற்றும் கட்டுமானத் துறைகளின் வாங்குதல்கள் அமைந்தன.
வணிக நிபுணர்கள் தெரிவிப்பதாவது, உலகளாவிய சந்தை அதிர்வுகள் மற்றும் புறநாட்டு முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக ஆரம்பத்தில் குறைவு ஏற்பட்டது. எனினும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை காரணமாக பர்சா மீண்டும் வலுவாக உயர்ந்தது.
சந்தை கண்காணிப்பாளர்கள், “இன்னும் நிலைத்தன்மையைப் பெற சில நாட்கள் ஆகலாம், ஆனால் தற்போதைய மீட்பு நம்பிக்கையளிக்கிறது,” எனக் கூறினர்.
– யாழினி வீரா



