Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

கடந்த ஆண்டு மட்டும் RM285 மில்லியன் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Picture: Bernama

கோலாலம்பூர், ஏப்ரல் 26 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கடந்த ஆண்டு ஊழல் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், மொத்தம் RM285 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்து, உறைந்தும், அபராதமும் விதித்துள்ளது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆசாம் பாக்கி தெரிவித்தார்.

MACC மேற்கொண்ட இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும், இது அதிகாரிகள் முழு நேர்மையோடும் திறமையோடும் செயல்பட்டதை நிரூபிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு முதல் காலாண்டில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை தொடர்புடைய விசாரணையில், RM177 மில்லியன் பெறுமானம் கொண்ட பணமும் தங்கத் தட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

MACC ஊடக விருது விழாவில் உரையாற்றிய அவர், எதிர்காலத்திலும் பெரிய அளவிலான மற்றும் பெரும் முக்கியத்துவம் கொண்ட ஊழல் வழக்குகளில் கவனம் செலுத்துவதாகவும், அனைத்து விசாரணைகளும் அரசியல் தலையீடு இல்லாமல் சட்டப்படி நடத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.

“முன்னாள் தலைவர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது பெரிய நிறுவனங்களின் இயக்குநர்கள் யாராக இருந்தாலும், எவரையும் பயமின்றி விசாரிக்கிறோம்,” என அவர் தெளிவுபடுத்தினார்.

-யாழினி வீரா

Scroll to Top