
Picture : Awani
சபா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர், வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தல் (PRN) சூழ்நிலையில், சபா மற்றும் புத்ராஜெயா இடையேயான உறவு எப்போதும் அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியல் நிலையில் சில மாற்றங்கள் நடந்தாலும், மாநிலம் மற்றும் மத்திய அரசு ஒருவரை ஒருவர் மரியாதையுடன் அணுக வேண்டும் என்பதே முக்கியம் என அவர் தெரிவித்தார்.
ஹஜிஜி கூறியதாவது, சபாவின் உரிமைகள், வளர்ச்சி, நலன் போன்ற விஷயங்களை முன்னேற்ற மத்திய அரசுடன் நல்லுறவு அவசியம். ‘Unnecessary Tension‘ உருவாகினால், அதைச் சுத்தமாக சமாளிக்க வேண்டியது தலைவர்களின் பொறுப்பு எனவும் அவர் விளக்கினார். அரசு மாற்றம் நடந்தாலும், மக்களின் நலனை முன்னிலைப்படுத்தும் பணிகளில் தாமதம் வரக்கூடாது என்பதே அவரது கருத்து.
சபாவின் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்புகள், அடிப்படை வசதிகள் போன்ற பல துறைகளில் மத்திய அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டியது மிக முக்கியம் என்றும் ஹஜிஜி கூறினார். மாநிலம் மற்றும் மத்திய அரசுக்கு இடையில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே, சபா விரைவான வளர்ச்சியைக் காண முடியும் என்றார்.
மேலும், வரவிருக்கும் PRN காலத்திலும் ‘Unnecessary Provocation’ அல்லது அரசியல் பிரச்சனைகள் உருவாக்காமல், மக்களின் நலன் குறித்து பேசும் தலைவர்கள் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாநிலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் தலைவர்கள் இருந்தால் மட்டுமே, சபா எதிர்காலத்தில் ஒரு வலுவான மாநிலமாக மாறும் எனவும் தெரிவித்தார்.
ஹஜிஜி முடிவில் கூறியது, “சபா–புத்ராஜெயா உறவு எப்போதும் ஒத்துழைப்புடனும், புரிதலுடனும் இருக்க வேண்டும். அது மக்களின் நலனை பாதுகாக்கும் ஒரே வழி,” என்று.



