Tazhal Media – தழல் மீடியா

/ Apr 02, 2025
Latest News
tms

புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் குழாய் வெடிப்பு: “முதலில் பட்டாசு சத்தம், பின்னர் விமானம் விழுந்தது போல அதிர்ச்சி” – பாதிக்கப்பட்டவரின் பகீர் அனுபவம்

Picture: Bernama

சுபாங் ஜாயா, 1 ஏப்ரல் : “முதலில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது, அதன் பிறகு பயங்கரமான வெடிப்பு ஒன்று ஏற்பட்டது, அது ஒரு விமானம் விழுந்தது போலவே இருந்தது,” என ஜாலான் புத்ரா ஹார்மோனியில் ஏற்பட்ட எரிபொருள் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.

25 வயதான சிறு வியாபாரி அக்மட் டானியல் மற்றும் அவரது மனைவி எலினா நதியாவதி (41) உடனடியாக தப்பியோட முடிந்ததாலும், முக்கிய ஆவணங்கள் உட்பட எந்த சொத்துகளையும் மீட்க முடியாததாலும் வருத்தம் தெரிவித்தார்.

“தொடக்கத்தில், அது ஹரி ராயா கொண்டாட்டத்திற்கான பட்டாசு என்று நினைத்தேன். ஆனால் சில நொடிகளுக்குள், வீடு அதிரத் தொடங்கியது. ஜன்னலை திறந்து பார்த்தபோது, தீ பற்றி எரிகிறது என்பதை உணர்ந்தேன்,” என்று அவர் நினைவுகூரினார்.

அவரது கை மற்றும் உடலின் சில பகுதிகள் தீக்காயம் அடைந்துள்ளன. “கதவை திறக்க முயன்றபோது, கைப்பிடி மிகவும் சூடாக இருந்தது. எனது மோட்டார்சைக்கிளை மீட்க முயன்றபோது, அதன் உருக்குழைந்த உலோகத்தில் என் தோல் ஒட்டிக் கொண்டது,” என்று அவர் துன்பத்துடன் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்ட தற்காலிக மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். “இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும். ஏனெனில் பலரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,” என்று அக்மட் டானியல் வலியுறுத்தினார்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top