Tazhal Media – தழல் மீடியா

/ May 14, 2026
Latest News
tms

மேற்கு ஆசியா மோதல்: உலக சமூகத்தின் தூதரக முயற்சிகள் பதற்றத்தை குறைக்க உதவும் என PM Anwar நம்பிக்கை

Picture : Awani

KUALA LUMPUR: மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களை குறைக்க, உலக சமூகத்தின் தூதரக முயற்சிகள் முக்கிய பங்காற்றும் என Prime Minister Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் குறைய வேண்டும் என அவர் கூறினார்.

அவர் இந்த கருத்தை, சர்வதேச அறிஞர் Professor Seyyed Vali Reza Nasr அவர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு தெரிவித்தார். அந்த சந்திப்பில் உலக அரசியல் நிலைமை மற்றும் தற்போதைய மோதல்களின் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. Anwar மேலும் கூறியதாவது, இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அனைத்துப் பக்கங்களும் அமைதியான பேச்சுவார்த்தை வழிக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்தும், தூதரக நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் மட்டுமே நிலையான அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என தெரிவித்தார். உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தற்போதைய மிக முக்கிய தேவையாகும் என்றும் Anwar வலியுறுத்தினார்.

Scroll to Top