
Picture : Awani
KUDAT: பிரதமர் அன்வார் இப்ராஹிம், Sabah மாநிலத்தின் Pulau Banggi பகுதியில் உள்ள Pos Dogoton பாதுகாப்பு முகாமிற்கு இன்று பணிப்பயணம் மேற்கொண்டார்.
Philippines நாட்டுடன் இணையும் Sabah வடக்கு கடல் எல்லை பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்வதற்காக இந்த விஜயம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ASEAN உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதை தொடர்ந்து அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
Pos Dogoton, நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் முன்நிலை பாதுகாப்பு முகாம்களில் ஒன்றாகும். குறிப்பாக கடத்தல், எல்லை ஊடுருவல் மற்றும் எல்லை தாண்டிய குற்றச்செயல்களை தடுக்க இந்த முகாம் முக்கியமாக செயல்படுகிறது என்று அன்வார் தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், அருகிலுள்ள தீவுகள் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு ரேடார் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார்.
தொலைதூர பகுதிகளில் கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை சூழ்நிலைகளிலும் நாட்டின் பாதுகாப்பை காக்கும் Angkatan Tentera Malaysia (ATM) அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பிரதமர் பாராட்டினார். நாட்டின் ஒவ்வொரு கடல் எல்லையையும் பாதுகாக்கும் பாதுகாப்பு படையினரின் தியாகம் நாட்டின் அமைதிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.



