
Picture : Awani
PUTRAJAYA, 22 மே 2026: நாடு முழுவதும் பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு மையங்களை (pusat jagaan) கண்டறிய Kementerian Pembangunan Wanita, Keluarga dan Masyarakat (KPWKM) திடீர் சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் Datuk Seri Nancy Shukri கூறுகையில், சமீபத்தில் குழந்தைகள் மற்றும் பாலகர்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சில பதிவு செய்யப்படாத பராமரிப்பு மையங்கள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்பி செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தகவல் வழங்காததால் அவற்றை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
“இது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு. சந்தேகத்திற்கிடமான பராமரிப்பு மையங்கள் குறித்து மக்கள் தகவல் வழங்கினால் மட்டுமே அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று Nancy கூறினார். மேலும், Jabatan Kebajikan Masyarakat (JKM) அதிகாரிகள் தொடர்ந்து திடீர் ஆய்வுகளை நடத்தி வருவதாகவும், விதிமுறைகளை மீறும் மையங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
சமீபத்தில் Bandar Sri Sendayan பகுதியில் ஏழு மாத குழந்தை ஒருவர் பராமரிப்பு மையத்தில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மையம் பதிவு செய்யப்படாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் என KPWKM தெரிவித்துள்ளது.



