
Picture : Awani
Kuala Lumpur, 6 May 2026 – Pusat Perubatan Universiti Malaya (PPUM) மேற்கொண்டு வரும் ரோபோ அறுவைச் சிகிச்சை (pembedahan robotik) முயற்சிகள், நாட்டின் சுகாதாரத் துறையில் முக்கிய முன்னேற்றத்தை உருவாக்கும் என Dr Wan Azizah Wan Ismail தெரிவித்துள்ளார். PPUM-இல் நடைபெற்ற “Robotic Surgery Anniversary 1.0” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ரோபோ மற்றும் AI தொழில்நுட்பங்கள் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்தும் முக்கிய கருவிகளாக மாறி வருவதாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தொழில்நுட்பம் மனிதர்களை மாற்றுவதற்காக அல்ல; மாறாக மருத்துவ பணியாளர்களின் திறனை மேம்படுத்தவும், சிகிச்சை செயல்முறைகளை துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற உதவுவதாகும் என்றார். PPUM தற்போது urologi, ginekologi, ENT மற்றும் kanser payudara உள்ளிட்ட ஆறு முக்கிய மருத்துவ துறைகளில் ரோபோ அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 90-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Malaysia-வில் kanser payudara சிகிச்சைக்கான முதல் ரோபோ அறுவைச் சிகிச்சையை PPUM வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாகவும் Dr Wan Azizah பாராட்டினார். அதே நேரத்தில், PPUM 5G அடிப்படையிலான Extended Reality (XR) தொழில்நுட்பத்தையும் மருத்துவ பயிற்சிகளில் பயன்படுத்தி வருவது, நாட்டின் மருத்துவ புதுமை திறனை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
PPUM துணைவேந்தர் Noor Azuan Abu Osman கூறுகையில், இந்த மாத இறுதிக்குள் 100 ரோபோ அறுவைச் சிகிச்சைகளை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். மொத்தத்தில், PPUM முன்னெடுத்து வரும் ரோபோ அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பம், Malaysia சுகாதாரத் துறையை உலக தரத்திற்கு உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.



