
கோலாலம்பூர், 4 மே – மலேசிய தமிழர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் வரும் மே 30ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
முதலில், “Rise Up: கனவு மெய்படா” என்ற ஊக்க நிகழ்ச்சி டாக்டர் பார்வீன் சுல்தானா தலைமையில் பிற்பகல் 3.00 மணி முதல் 5.30 மணி வரை Kuen Cheng Auditorium-ல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி, இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் வழிகள், தன்னம்பிக்கை வளர்ப்பு மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் குறித்து வழிகாட்டும் வகையில் அமையும்.

அதனைத் தொடர்ந்து, இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரை அதே இடத்தில், “அன்புக்கு எதிரி நம்பிக்கையா? சந்தேகமா?” என்ற தலைப்பில் அவுடையப்பன் தலைமையில் நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது. உறவுகளில் ஏற்படும் நம்பிக்கை மற்றும் சந்தேகம் போன்ற உணர்வுகளை மையமாகக் கொண்டு சிந்திக்க வைக்கும் விதமாக இந்த விவாதம் அமையும்.
இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் கட்டணம் ரி.ம.120 (பிரீமியம் / கோல்ட்) மற்றும் ரி.ம.70 (ஸ்டாண்டர்ட் / சில்வர்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIP Film Production மற்றும் Mithra Cinefilms இணைந்து இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதுடன், டிக்கெட் விநியோகம் Great Ticket மூலம் நடைபெறுகிறது.
மொத்தத்தில், ஊக்கம், அறிவு மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை ஒருங்கிணைக்கும் இந்த இரட்டை நிகழ்ச்சி, பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா



