Tazhal Media – தழல் மீடியா

/ Jun 02, 2026
Latest News
tms

Sabah-க்கு வழங்கப்படும் இடைக்கால சிறப்பு மானியம் RM1.5 பில்லியனாக உயர்வு – PM Anwar

Picture : Awani

PENAMPANG – Sabah மாநிலத்திற்கு வழங்கப்படும் இடைக்கால சிறப்பு மானியம் (Geran Khas Interim) RM600 மில்லியனில் இருந்து RM1.5 பில்லியனாக உயர்த்தப்படுவதாக Prime Minister Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

PUTRAJAYAவில் இருந்து கிடைத்த தகவலின்படி, இந்த உயர்வு Malaysia Agreement 1963 (MA63) கீழ் Sabah மாநிலத்திற்கு உரிய 40% வருவாய் உரிமை அமலாக்கம் இறுதி செய்யப்படும் வரை இடைக்கால நடவடிக்கையாக வழங்கப்படுகிறது.

PENAMPANGவில் நடைபெற்ற Pesta Kaamatan நிகழ்ச்சியில் உரையாற்றிய Anwar Ibrahim, இந்த நிதி உயர்வு நிரந்தர தொகை அல்ல என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்தும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறுதி தொகை பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், Sabah மாநில வளர்ச்சி தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த நிதி முக்கிய பங்காற்றும் என்றும், மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

PUTRAJAYA அரசாங்கம், கடந்த சில ஆண்டுகளில் Sabahக்கு வழங்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், மாநில மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் செலவின உயர்வு இருந்தாலும், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். இந்த அறிவிப்பு Sabah மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Scroll to Top