
Picture : Awani
KUALA LUMPUR: நாட்டின் வளர்ச்சியும், புதிய மாற்றங்களும் இளைஞர்களின் கைகளில் இருப்பதாக Prime Minister Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். குறிப்பாக mahasiswa-கள் அறிவு, நல்ல மதிப்புகள் மற்றும் முதிர்ந்த சிந்தனையுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Universiti Malaya-வில் நடைபெற்ற Majlis Ramah Mesra bersama mahasiswa India நிகழ்ச்சியில் உரையாற்றிய PM Anwar, இன்றைய இளைஞர்கள் நாட்டை ஒன்றுபடுத்தும் புதிய சக்தியாக திகழ்கிறார்கள் என்றார். இனம், மதம் மற்றும் பின்னணி வேறுபாடுகளை தாண்டி rakyat ஒன்றுபட வேண்டும் என்றும், sempit politics மற்றும் perkauman politics நாட்டின் ஒற்றுமையை பாதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
மேலும், Malaysia-வின் எதிர்காலம் இளைஞர்களின் துணிச்சல் மற்றும் மாற்றத்தை ஏற்கும் மனப்பான்மையில் உள்ளது என அவர் குறிப்பிட்டார். Malaysia MADANI கொள்கை அனைத்து rakyat-களுக்கும் ihsan, keadilan மற்றும் kesejahteraan வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது Unit Transformasi Masyarakat India Malaysia (MITRA)-க்கு கூடுதலாக RM50 juta ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீடு RM150 juta ஆக உயர்ந்துள்ளது. இந்த நிதி இந்திய சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என PM Anwar தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு mahasiswa India மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்பதையும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.



