
Picture : Awani
Kuala Lumpur, 11 ஜூன் 2026: El-Nino வானிலை நிகழ்வை எதிர்கொள்ள நாட்டின் அடிமட்ட (akar umbi) அளவிலான தயார்நிலைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
தீவிரமான வானிலை மாற்றங்களின் தாக்கங்களை சமாளிக்க முன்கூட்டியே எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தயாரிப்புகளே முக்கிய பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கூறினார். Majlis Tindakan Ekonomi Negara (MTEN) கூட்டத்தில் Jabatan Meteorologi Malaysia (MetMalaysia) வழங்கிய El-Nino தொடர்பான விளக்கத்தின் பின்னர் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக Anwar தெரிவித்தார்.
அவர் கூறுகையில், El-Nino தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவான தகவல்களை வழங்க MetMalaysia அனைத்து மாநிலங்களிலும் விளக்க நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
El-Nino காரணமாக அதிக வெப்பநிலை, வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற சவால்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் Malaysia மக்கள் நலனையும் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார். El-Nino போன்ற இயற்கை சவால்களை எதிர்கொள்ள அரசு அமைப்புகள், மாநில நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



