Tazhal Media – தழல் மீடியா

/ May 20, 2026
Latest News
tms

ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் – விசாரணைக்கு உத்தரவு வழங்கிய Fahmi

Picture : Awani

PUTRAJAYA, 20 மே 2026: Konvensyen Pakatan Harapan (PH) நிகழ்வின் போது ஊடகவியலாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு தகவல் தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துள்ளதாகவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் மரியாதையும் எப்போதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது சிலர் கடுமையாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, PH மாநாட்டு செயலகத்திற்கு (Secretariat Konvensyen PH) முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணுமாறு Fahmi உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஊடகவியலாளர்கள் எந்த அரசியல் அல்லது பொதுநிகழ்விலும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செய்தி சேகரிக்க முடியும் வகையில் சூழல் இருக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக Kelab Media Johor (KMJ) போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி செய்துள்ளது.

Scroll to Top