Tazhal Media – தழல் மீடியா

/ Jun 11, 2026
Latest News
tms

Kerajaan Perpaduan தொடர்ந்து ஒற்றுமையை காக்கும் – அரசியல் நண்பர்களுக்கு துரோகம் செய்யமாட்டோம் என PM Anwar உறுதி

Picture : Awani

TOKYO, 11 ஜூன் 2026: Kerajaan Perpaduan தற்போதுள்ள அரசியல் ஒப்பந்தங்களையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், தங்களுடன் இணைந்து செயல்படும் அரசியல் நண்பர்களுக்கு துரோகம் செய்யும் எந்த நடவடிக்கையையும் எடுக்காது என்றும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

Pakatan Harapan (PH) தலைவருமான Anwar, அரசாங்க கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரும் நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்காக ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகளை மதித்து செயல்பட்டு வருவதாக கூறினார். அவர் கூறுகையில், தேசிய அளவில் Kerajaan Perpaduan வலுவாக இருக்க வேண்டும் என்பதே அமைச்சரவை தலைவர்களின் நிலைப்பாடாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட Kerajaan Perpaduan-இல் Pakatan Harapan (PH), Barisan Nasional (BN), Gabungan Parti Sarawak (GPS), Gabungan Rakyat Sabah (GRS) உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில அரசியல் மாற்றங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த Anwar, கூட்டணி அரசியலில் பேச்சுவார்த்தை, ஆலோசனை மற்றும் நல்ல ஒத்துழைப்பு முக்கியம் என்றும், உறவுகளை அவசரமாக முறித்துக்கொள்ளும் அணுகுமுறை அரசின் நடைமுறை அல்ல என்றும் கூறினார்.

நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக Kerajaan Perpaduan தொடர்ந்து ஒன்றாக செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top