
Picture : Awani
ஜொகூர் பாரு, 17 மே 2026: உணவு விநியோக ஓட்டுநர்களுக்கான BUDI MADANI RON95 (BUDI95) திட்டத்தின் மாதாந்திர பெட்ரோல் kuota-வை 200 லிட்டரிலிருந்து 250 லிட்டராக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவு தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (MTEN) கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும், அதற்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். உணவு விநியோக சேவையில் ஈடுபடும் (p-hailing) ஓட்டுநர்கள் தினசரி அதிக பெட்ரோல் செலவுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அரசு கவனத்தில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய 200 லிட்டர் வரம்பு, பலரின் வேலை தேவைகளுக்கு போதாமை ஏற்படுத்துவதாகவும், அதனால் கூடுதலாக குறைந்தது 50 லிட்டர் உயர்த்தி 250 லிட்டராக மாற்றுவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். தான் நேரடியாக களத்தில் சென்று ஓட்டுநர்களின் கருத்துகளை கேட்ட பிறகு இந்த பரிந்துரை உருவாகியதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே நேரத்தில், எந்த முடிவும் நாட்டின் நிதி நிலைமை மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலக்கு சார்ந்த BUDI95 போன்ற உதவித்திட்டங்கள் தகுதியான மக்களுக்கு தொடர்ந்து பயன் தர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



