Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

Diesel சந்தை விலை உயர்வு: 85% மக்கள் பாதிக்கப்படவில்லை – PM Anwar

Picture : Awani

Kota Bharu, 18 April 2026 – நாட்டில் diesel சந்தை விலை உயர்வு ஏற்பட்டிருந்தாலும், சுமார் 85 சதவீத மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, பெரும்பாலான மக்கள் இன்னும் அரசாங்கம் வழங்கும் சலுகை (subsidi) விலையில் diesel-லை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சந்தை விலை உயர்வு நேரடியாக அனைவரையும் பாதிக்கவில்லை என அவர் விளக்கினார்.

“நேற்று மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், diesel விலை உயர்வு உண்மையில் 15 சதவீத மக்களையே பாதிக்கிறது. மீதமுள்ள 85 சதவீத மக்கள் சலுகை விலையிலேயே diesel-லை பெறுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும், மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதன் பகுதியாக, சில முக்கிய போக்குவரத்து துறைகளுக்கு, குறிப்பாக பள்ளி பேருந்துகள் மற்றும் முக்கிய சரக்கு வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சில தரப்புகள் diesel விலை உயர்வு மீனவர்கள் போன்றவர்களை பாதிக்கிறது என கூறினாலும், அவர்கள் சலுகை விலையிலேயே diesel-லை பெறுகின்றனர் என அவர் விளக்கினார்.

மொத்தத்தில், diesel சந்தை விலை உயர்வு பற்றிய தகவல்கள் சில நேரங்களில் தவறாக பரப்பப்படுகின்றன என்றும், பெரும்பாலான மக்கள் அரசின் சலுகை திட்டங்களால் இன்னும் பாதுகாக்கப்படுகின்றனர் என்றும் பிரதமர் அன்வர் வலியுறுத்தினார்.

Scroll to Top