
Picture : Awani
KUALA LUMPUR: Dewan Rakyat-இல் Rang Undang-Undang (RUU) Kawalan Padi dan Beras (Pindaan) 2026 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் நெல் மற்றும் அரிசி துறையை மேலும் ஒழுங்குபடுத்தவும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம், நெல் மற்றும் அரிசி தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கவும், அரிசியின் தரம், விலை மற்றும் சந்தை நிர்வாகத்தை மேலும் சிறப்பாக கண்காணிக்கவும் அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
Menteri Pertanian dan Keterjaminan Makanan Datuk Seri Mohamad Sabu கூறுகையில், நாட்டின் அரிசி விநியோகம் சீராக இருப்பதையும், விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.
திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், விதிமுறைகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக, நிறுவனங்கள் மீண்டும் தவறு செய்தால் RM1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும் வகையில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும், Ketua Pengarah மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நெல் மற்றும் அரிசியின் விலை, தரம் மற்றும் உரிமம் தொடர்பான கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்படும். இதன் மூலம் சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை குறைத்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் இந்த நடவடிக்கையின் மூலம் நெல் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதுடன், நாட்டின் உணவு பாதுகாப்பையும் வலுப்படுத்த முயற்சி செய்கிறது. அரிசி உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான அனைத்து தரப்பினரும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, நெல் மற்றும் அரிசி துறையில் வெளிப்படையான நிர்வாகம் உருவாகும் என்றும், பொதுமக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



